Tuesday, May 18, 2010

வாருங்கள் ஞானதேசிகன்.


அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஞானதேசிகன் அவர்களே,
முதலில் உங்களுக்கு உள்துறை செயலாளராக நியமிக்கப் பட்டிருக்கும் உங்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்.

உங்களுக்கு சவுக்கின் அன்பு வணக்கங்கள். நீங்கள் யாரென்று சவுக்குக்கு தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு ஐஏஎஸ் ஆபீசர் என்பது தெரியும். ஐஏஎஸ் ஆபீசர்கள் என்றால் சவுக்குக்கு பிடிக்காதே என்று தயவு செய்து நினைக்காதீர்கள். சவுக்குக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் என்ற எந்த பாகுபாடும் கிடையாது.


சவுக்குக்கு தெரிந்ததெல்லாம் மனிதர்கள் தான். மனிதர்கள் என்றால், அத்தனை மனிதர்களும். இன்று தமிழக அரசில் இருக்கும் சில அதிகாரிகள், திராவிட முன்னேற்றக் கழக மக்களை மட்டும், மனிதர்கள் என்று கருதுகிறார்கள். மற்றவர்கள் எல்லாம், மாக்கள் என்று கருதுகிறார்கள். ஆனால் சவுக்குக்கு, அனைவரும் மனிதர்களே.

உங்களை குறிப்பாக வரவேற்க சவுக்குக்கு, பல்வேறு காரணங்கள் உண்டு. அதில் முக்கியமான காரணம், இது வரை உள் துறை செயலாளராக இருந்த மாலதி, ஐஏஎஸ் ஆபிசராக அல்ல, இது வரை ஒரு மனித ஜென்மமாக கூட செயல்பட்ட தில்லை என்பதே சவுக்கின் அனுபவம்.


மாலதி மட்டுமல்ல, தமிழகத்தில் பல்வேறு அதிகாரிகள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வட்டச் செயலாளர்கள் போலத்தான் இது வரை செயல்பட்டு வந்ததார்கள், இதற்கெல்லாம் காரணம், கருணாநிதியின் அடங்காத பிடிவாதம் என்று வறட்டுக் காரணம் கூறுவார்கள். ஆனால், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், இந்திய மக்களுக்கும், அரசியல் சட்டத்திற்கும், கருணாநிதியை விட கடமைப் பட்டவர்கள் அல்லவா ? தமிழக மக்களும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும், கருணாநிதியை விட பெரியவை அல்லவா ?

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தால், அதிமுக தொண்டர் போல செயல்படுவதும், கருணாநிதி ஆட்சியில் இருந்தால், திமுக உடன் பிறப்பு போல செயல்படுவதும், அகில இந்தியப் பணி அதிகாளிகளுக்கு அழகல்ல. ஆனாலும், மாலதி உள்துறை செயலாளராக இருந்த காலம் வரையில், அவர் கழக உடன் பிறப்பாக மட்டும் அல்ல, கருணாநிதி குடும்பத்தின் ஒரு அங்கமாகவும், கருணாநிதியின் நம்பிக்கைக்கு பாத்திரமான, அடியாள் போலவுமே செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

இவ்வாறான செயல்பாடுகள், மாலதிக்கு, தலைமைச் செயலாளர் பதவியையும், கருணாநிதியின் நம்பிக்கையையும் பெற்றுத் தந்திருக்கக் கூடும். ஆனால், இந்திய அரசியல் அமைப்பின் பாலும், இந்திய மக்களின் பாலும், உளமார்ந்த அன்போடும், நேர்மையோடும், பணியாற்றுவேன் என்ற உறுதியில் இருந்து மாலதி தவறி விட்டார் என்பதே உண்மை.

மாலதி போன்ற ஐஏஎஸ் அதிகாரிகள், தாங்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் என்பதை மறந்து, அன்றைய ஆட்சியாளர்களின் ஏவல் பணியாளர்களாக மாறிப் போவது, இந்த ஜனநாயகத்தின் மிகப் பெரிய சாபக் கேடு.

ஆனால், இதையும் தாண்டி, ஏதாவது ஒரு வகையில் ஒரு நம்பிக்கை கீற்று, ஒரு நம்பிக்கை ஒளி, இருந்து கொண்டுதான் இருக்கிறது. இது வரலாறு நெடுக இருந்தே வந்திருக்கிறது.
கிறித்துவ மதத்தின் ஆதிக்கத்தில் உலகமே இருந்த போதும், உலகத்தை படைத்தது, ஏசு கிறிஸ்து என்ற பொய்யை உலகத்தை நம்ப வைக்க, தேவாலயங்களும், மிக பலம் வாய்ந்த பாதிரியார்களும் முயற்சி செய்து, அதில் வெற்றி பெற்ற போதும், உலகம் உருண்டை என்று ஒரு கலகக் குரல் ஒலிக்கத் தான் செய்தது. அந்தக் குரல் வரலாறு நெடுக ஒலித்துக் கொண்டேதான் இருக்கும். அதை யார் நினைத்தாலும், தடுக்க இயலாது. சர்வ வல்லமை பொருந்திய கருணாநிதி நினைத்தால் கூட.

அதைப் போல, மாலதி, உள் துறையின் செயலாளராக, கடந்த நான்கு ஆண்டுகளாக இருந்து, எவ்வளவோ, நல்ல காரியங்களைச் செய்திருக்க முடியும். எத்தனையோ குடும்பங்களில் ஒளியேற்றி வைத்திருக்க முடியும். ஆனால், மாலதி செய்ததெல்லாம், கருணாநிதி என்ற கயவனின் கையாளாக, அடியாளாக, ஏவலாளாக, மனசாட்சி இல்லாத பதராக, கருணாநிதியை விட மிகவும் மோசமான ஒரு அரசியல்வாதியாகவே இத்தனை ஆண்டு காலம் செயல்பட்டு வந்தார்.

இப்போது உங்களை உள்துறை செயலாளரா நியமித்திருப்பதும், ஏதோ, நீங்கள் ஒரு திறமையான ஐஏஎஸ் ஆபீசர் என்பதால் அல்ல. நீங்கள் மாலதியை விட, மிகுந்த விசுவாசமான ஒரு ஏவலாளாக கருணாநிதிக்கு வேலை செய்வீர்கள் என்று, யாரோ, உங்கள் சார்பாக கருணாநிதிக்கு சொல்லியிருப்பதால் தான். ஆனாலும், உள் துறை செயலாளர் என்ற இந்த பதவி மிகுந்த முக்கியமான பதவி.

இப்பதவியை நல்ல முறையில் பயன் படுத்தி, உண்மையில் உங்களுக்கு தங்கள் வரிப் பணத்தில் இருந்து ஊதியம் வழங்கம் அந்த மக்களுக்கு விசுவாசமாக செயல்படலாம். இல்லை, ஊரை அடித்து உலையில் போட்டு, தன் குடும்பத்தை மட்டுமே நேசிக்கும் கருணாநிதிக்கு விசுவாசமாகவும் செயல்படலாம்.

இதில் எப்படிப் பட்ட உள்துறை செயலாளராக நீங்கள் வரலாற்றில் பதிவு செய்யப் படுவீர்கள் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் ஞானதேசிகன். உங்கள் மீது சவுக்கு மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறது. வீணாக்கி விடாதீர்கள். குறிப்பாக, உளவுத் துறையில் இருக்கும் ஜாபர் சேட்டை நம்பாதீர்கள். அவர் உங்களை மிரட்டக் கூடும். உங்கள் தொலைபேசியை ஒட்டுக் கேட்கக் கூடும். உங்களுக்கு ஏதேனும் பலவீனம் இருந்தால், அதை பயன்படுத்தி, உங்களை EXPLOIT செய்யக் கூடும்.

அதற்கெல்லாம் இடம் கொடுக்காதீர்கள் ஞானதேசிகன். ஜாபர் சேட், ஒரு, நயவஞ்சக நரி என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களை நம்ப வைத்துக் கழுத்தறுக்கக் கூடும்.

உங்கள் பணி சிறக்க சவுக்கின் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஏழை மக்களுக்கும், உழைப்பாளி மக்களுக்கும், குறிப்பாக, மக்களுக்காக பணியாற்றுங்கள். வாழ்த்துக்கள்.




சவுக்கு

2 comments:

  1. back in '87 - 88 when Malathy was Collector of North Arcot Ambedkar Dist...people working in the collectrate found the corruption level increasing dramatically...

    especially with tanneries..she made lot of money

    ReplyDelete
  2. குறைந்த பட்சம் புதிய உள்துறை செயலாளர் இதைப் படிப்பார் என்று நம்புவோமாக.

    ReplyDelete