Saturday, October 23, 2010

பொதுப் பணத் துறை

இந்த வார தமிழக அரசியல் இதழில், “வழக்கில் சிக்க வைக்க சதி. ராமசுந்தரம் ஐஏஎஸ் ராஜினாமா ? “ என்ற தலைப்பில் அட்டைச் செய்தி வந்திருக்கிறது. படித்துப் பார்த்தால், நமது சுனில் குமார் பற்றியும் செய்தி இருக்கிறது. சுனில் குமாரைப் பற்றி வேறு யாரோ எழுதவும், அதை நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கவும் முடியுமா ? சுனில் குமார் சவுக்கின் செல்லப் பிள்ளை அல்லவா ? யாரோ ஒருவர் சுனில் குமாரைப் பற்றி எழுதுகிறார்களே. சவுக்கு கம்மென்று பார்த்துக் கொண்டிருக்கிறதே என்று, நாக்கு மேலப் பல்லப் போட்டு நாலு சாதி சனம் கேள்வி கேட்டுட்டா அசிங்கமாப் போயிடாது… … ? அதனால், இந்தச் செய்தியைப் பற்றி சவுக்கு டீம் புலன் விசாரணையில் இறங்கியது. நமது புலன் விசாரணையில் கிடைத்த செய்திகளுக்கு போவதற்கு முன், தமிழக அரசியலில் வந்த கட்டுரையை படியுங்கள். மேலும் படிக்க
சவுக்கு

Friday, October 22, 2010

சூடும் இல்லை. சொரணையும் இல்லை.

யாருக்கு என்று கேட்கிறீர்களா ? தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகளுக்குத் தான்.

ஒரு அரசாங்கம் தவறு செய்திருக்கிறது என்று நீதிமன்றம் சுட்டிக் காட்டினால், அதை திருத்திக் கொள்வதை விட்டு விட்டு, அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்யும் ஒரு கேடு கெட்ட அரசாங்கத்தை என்னவென்று சொல்வீர்கள் ? மேலும் படிக்க
சவுக்கு

முதலை வடிக்கும் கண்ணீர்.

போலியாக கண்ணீர் வடிப்பதற்கு முதலைக் கண்ணீர் என்று உதாரணம் கூறுவார்கள். அப்படிப்பட்ட முதலைக் கண்ணீரை இன்று வடிப்பது யார் ?

இந்தக் கண்ணீரையும் இப்போது உகுக்க வேண்டிய தேவை என்னவென்றால், காங்கிரஸ் கட்சியும், சோனியா காந்தியும், பழைய திமுக மீதான பழைய கரிசனத்தை காட்டாததும், வேண்டாத மருகளைப் போல திமுகவை நடத்துவதுமே ஆகும். 2004ல், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் வந்து, கருணாநிதியை சந்தித்த சோனியா, 2010ல் விமானநிலையத்தில், 10 நிமிடங்கள் மட்டுமே கருணாநிதிக்கு நேரம் ஒதுக்குகிறார் என்றால், கருணாநிதி எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கடந்த ஒன்றரை வருட காலமாக தமிழ்ச் சொந்தங்கள் முள்வேளி முகாமுக்குள் தானே அடைபட்டுள்ளார்கள் ? அப்போதெல்லாம் இல்லாத கரிசனம், கருணாநிதிக்கு இப்போது என்ன ? என்னவென்றால், திமுகவை அனுசரித்து, சட்டசபைத் தேர்தலில் உரிய கூட்டணி வைக்காவிட்டால். திமுக தமிழர் பிரச்சினையை மீண்டும் கையில் எடுக்கும், காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் என்று சூசகமாக உணர்த்துகிறாராம்…..!!!! மேலும் படிக்க
சவுக்கு

Monday, October 18, 2010

இன்றோடு ஆறு ஆண்டுகள்.

இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா ? சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி வீரப்பன் இறந்து இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகின்றன.


வீரப்பனை கொன்றோம் என்று மார் தட்டிக் கொண்டவர்களும், அதிகாரி வீட்டில் சப்பாத்தியும் தோசையும் சுட்டவர்களும், அதிகாரி ஷூவுக்கு பாலீஷ் போட்டவர்களும், ஒரு படி பதவி உயர்வும், இரண்டு லட்சம் ரொக்கமும், இரண்டு கிரவுண்டு நிலமும் பெற்று இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. மேலும் படிக்க


சவுக்கு