Thursday, February 4, 2010

செங்கல்பட்டில் தமிழீழ அகதிகளை தாக்கிய காட்டுமிராண்டி காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்



செங்கல்பட்டு அகதிகளுக்கான சிறப்பு முகாமில், கருணாநிதியின் கைக்கூலி காவல்துறையால் நடத்தப் பட்ட கொடிய தாக்குதலைக் கண்டித்து இன்று (04.02.2010) மாலை சென்னை மெமோரியல் ஹால் அருகே இன்று இதழாளர் அய்யநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன், வழக்கறிஞர் பா.புகழேந்தி, தமிழ் நியூஸ் ஆசிரியர் TSS மணி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

எழுச்சியோடு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏறக்குறைய 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வெகு விரைவாக, துரித காலத்திற்குள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்து சிறப்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திய இதழாளர் அய்யநாதன் அவர்களுக்கு என்றென்றும் எங்கள் நன்றி உரியது.

ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப் பட்ட ஒளிப்படங்கள்




































சவுக்கு



No comments:

Post a Comment